காலம் என்பது கடப்பதற்கு மட்டும் தானா? - அறிவியல் மற்றும் ஆன்மீக பார்வை.!
காலம் என்பது கடப்பதற்கு மட்டும் தானா? - அறிவியல் மற்றும் ஆன்மீக பார்வை.!
காலம் என்பது நம் எண்ணங்களை ஏறு வரிசையில் எண்ணுவதுதான். அதனாலேயே காலம் முன்னோக்கி விரிந்து செல்வதைபோல் தோன்றுகிறது "
- விவேகானாந்தர்
காலத்தை பற்றிய தெளிவும் அறிவும் பண்டைய இந்தியாவில் இருந்தது. காலம் என்பது என்ன? வெற்றிடம் என்பது என்ன? இரண்டிற்க்கும் உள்ள தொடர்பு என்ன்ன என்பது பற்றியெல்லாம், இந்திய ஞானிகள் தெளிவாக அறிந்திருந்தார்கள்!! நவீன விஞ்ஞானம் இதை சமீபத்தில் தான் கண்டுபிடித்து உணர்ந்திருக்கிறது.
காலமும் வெற்றிடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. "காலம் என்பது ஒருவர் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதையும் அல்லது வேகமாக நகர்வதை பொருத்து மாறுபடக்கூடியது" என்கிற தத்துவம் . நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்த காலம் சம்பந்தமான பல தாத்பர்யங்களில் ஒன்று.
இதை பின்னணியாகக் கொண்டு இந்த உதாரணத்தை அணுகி பாருங்கள்…
அதாவது ஒரு விண்வெளி வீரர் விண்கலத்தில் அமர்ந்து ஒளியின் வேகத்தில் விண்வெளியில் பயணித்து எத்தனை வருடங்கள் கழித்து திரும்பி வந்தாலும் அவர் கிளம்பும்போது இருந்த வயதையும் தோற்றத்தையும் கொண்டிருப்பார் பூமியில் அவருடைய வயதை கொண்ட ஒருவர் அவர் திரும்பி வரும்போது வயதான தோற்றத்தை கொண்டிருப்பார்.காலம் என்பது கடப்பதற்கு மட்டும் தானா?
- ஒரு அறிவியல் பார்வை
நவீன விஞ்ஞானம் இதை என்று "'Twin Paradox"' என அழைக்கிறது. ஒரு கடிகாரம் நிலையாக இருக்கும்போது நமக்கு ஒரு நேரக் கணக்கை காண்பிக்கும். அதே கடிகாரம் வேகமாக நகரும் போது அது காண்பிக்கும் நேரக்கணக்கு நிலையாக இருந்த கடிகாரம் காட்டிய நேரக்கணக்கை விட குறைவானதாக இருக்கும்.
ஒரு வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தில் நம்மால் பயணிக்கவோ அல்லது நகரவோ முடிந்தால் காலம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போய்விடும்.