இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருமலை பிரமோற்சவம் - எப்போது? விதிமுறைகள் என்ன? தேவஸ்தானத்தின் அறிவிப்பு
இந்த ஆண்டு திருப்பதி பிரமோற்சவம் விழாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் சேவைகள் நடைபெற இருப்பது பக்தர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு திருப்பதி பிரமோற்சவம் விழாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் சேவைகள் நடைபெற இருப்பது பக்தர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் விழா வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி நடக்க இருக்கிறது அதனை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருமலை கோவிலின் நான்கு மாத வீதிகளில் வாகன சேவை நடக்க உள்ளது.
பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருமலையில் உள்ள அன்னமய பவனில் ஏற்ற திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட்ரமணா ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய தேவஸ்தான முதன்மைச் செயலாளர் ஏ.வி.தர்மரெட்டி பேசியதாவது, 'திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் தொடங்கி அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது, 27ஆம் தேதி கொடியேற்றம் 1'ம் தேதி கருட சேவை, இரண்டாம் தேதி தங்க தேரோட்டம், நான்காம் தேதி தேர் திருவிழா, ஐந்தாம் தேதி சக்கர ஸ்தானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ கொடியேற்றம் அன்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி திருமலைக்கு வந்து முதல்வர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார், தமிழ் புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை கருட சேவை வருவதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டல் நெரிசலை சமாளிக்க திருப்பதி தேவஸ்தானம் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.