காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசின் கள்ளத்தொடர்பால், பால் தாக்கரேயின் சிவசேனாவிற்கு பால் ஊற்றும் உத்தவ் தாக்கரே!
காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசின் கள்ளத்தொடர்பால், பால் தாக்கரேயின் சிவசேனாவிற்கு பால் ஊற்றும் உத்தவ் தாக்கரே!
மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் அங்கு பாஜக – சிவசேனா கூட்டணி அரசு அமையும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. எடுத்த எடுப்பிலேயே தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வர் ஆக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும் 50 சதவீத அமைச்சர்களையும் சிவசேனாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.
அனுபவம் எதும் இல்லாத 29 வயது ஆதித்ய தாக்கரேவை மிகப்பெரிய மாநிலமான மகராஷ்டிராவிற்கு முதல்வர் ஆக்குவதில் பாஜகவிற்கு உடன்பாடில்லை. மக்களும் இதை விரும்பவில்லை.
மேலும் பாஜக வென்ற 105 இடங்களில், பாதி இடங்களை கைப்பற்றிய (56 இடங்கள்) சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதே அதிகம்தானே? ஆனால் இதையும் தாண்டி சிவசேனாவிற்கு துணை முதல்வர் பதவி கொடுக்க பாஜக முன்வந்தது.
ஆனால் தன் மகனை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தே தீரவேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே விடாபிடியாக இருந்தார். இதுதான் அவரது தந்தை பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவுக்கு பால் ஊற்றப்போகிறது என்பதை அவர் யோசிக்க வில்லை. பதவி வெறி அவரை தங்களின்பரம எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்க்க வைத்தது.