முகக்கவசம் அணிந்து வந்தால் 15 ரூபாய் தக்காளி 12 ரூபாய்க்கு : திருப்பூரில் காய்கறி வியாபாரி அசத்தல்

முகக்கவசம் அணிந்து வந்தால் 15 ரூபாய் தக்காளி 12 ரூபாய்க்கு : திருப்பூரில் காய்கறி வியாபாரி அசத்தல்

Update: 2020-04-12 13:53 GMT

கொரோனா தொற்று நோயின் காரணமாக பொது மக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது. அந்த பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார் திருப்பூரில் உள்ள காய்கறி வியாபாரி ஒருவர். முகக்கவசம் அணிந்து வந்தால் 15 ரூபாய் தக்காளி 12 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூவி கூவி விற்கிறார்.  அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய்கார்த்திகேயன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். 

தொடர்ந்து பலரும் அந்த காய்கறி வியாபாரியை பாராட்டி வருகின்றனர். 

Similar News