“மக்கள் தொகை கணக்கு எடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” – தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை வறுத்தெடுத்த தமிழருவி மணியன்!
“மக்கள் தொகை கணக்கு எடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” – தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை வறுத்தெடுத்த தமிழருவி மணியன்!
“ஒரு வழிபோக்கனின் வாழ்க்கை பயணம்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அந்த புத்தகத்தின் ஆசிரியர் தமிழருவி மணியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு முழுக்க முழுக்க திராவிட முன்னேற்ற கழகமும், காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும், சிறுபான்மை மக்களின் நலன்களுக்காகதான் இருக்கிறார்களா? இந்திய குடிமகன்களாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறேன்? இந்திய மக்கள் தொகை கணக்கு எடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறேன்?
நான் மோடிக்கு வக்காலத்து வாங்குகின்ற வக்கீல் இல்லை. அமித்ஷாவுக்கு பல்லாண்டு பாடுகின்ற மனிதனும் அல்ல. ஆனால் ஒன்றை உங்களிடம் கேட்கிறேன், குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் பதிவேற்றி சட்டம் இவற்றின் மூலமாக இந்தியாவில் ஒரு இஸ்லாமியன் பாதிக்கப்படுவான், ஒரு கிறிஸ்தவர் பாதிக்கப் படுவார் என்பதை நீங்கள் எனக்கு ஆதாரத்தோடு சொல்லுங்கள், பார்க்கலாம்.
மோடியும், அமித்ஷாவும் இன்று வாழக்கூடிய சிறுபான்மை மக்களில் ஒரு மனிதனையாவது குடியுரிமை இல்லை என்று பறித்தே அகதிகளாக இன்னொரு இடத்திற்கு அனுப்புவார்கள் என்றால், அதை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய முதல் மனிதனாக தமிழருவி மணியன் இருப்பான். ஆனால் அப்படி ஒரு நிலை இருக்கிறதா? நான் திரும்ப திரும்ப படித்து பார்க்கிறேன். படிக்காமல், புரிந்துகொள்ளாமல் நான் எதையும் பேசுவது இல்லை.
இன்றைக்கு எப்படிப்பட்ட அவதூறுகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள்? வேண்டும் என்றே பொய்யை விற்பனை செய்கிறீர்கள். ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறீர்கள். அதில் மாணவர் சமுதாயம் பங்கேற்கிறது. அதில் ஒரு மாணவியை பார்த்து கேட்கிறது ஊடகம். "இந்த ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் ஏன் கலந்து கொள்கிறீர்கள்?" என்று.
அந்த பேதைப் பெண் சொல்கிறாள், “இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு மோடியும், அமித்ஷாவும் புறப்பட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள். அது நியாயமா” என்று கேட்கிறாள்.