தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருத்துவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் தி.மு.க எம்.பி : தமிழின விரோதியா தி.மு.க?
ஒரு நாட்டின் பாரம்பரியத்தை காக்க வேணுடும் என்றால் அந்த நாட்டின் சம்பிரதாயங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், உணவு முறை, வைத்திய முறை, வாழ்க்கை முறை, உறவு முறை என பாரம்பரியமாக கடைபிடிக்கும் அனைத்தையும் விடாமல் தொன்றுதொட்டு கடைபிடித்தால் மட்டுமே அந்த சமுதாயம் அழியாமல் பாதுகாக்கப்படும்.
இதில் மனிதன் வாழ இன்றியமையாதது உணவு முறை மற்றும் வைத்திய முறை, ஏனெனில் இவை இரண்டுமே அந்த மக்கள் வாழும் மண்ணின் சீதோஷ்ண நிலை, சுற்றுசூழலுக்கு ஏற்ப கடைபிடிக்கப்பட்டிருக்கும். இவை இரண்டும் மாறுபட்டால் அந்த மக்களின் ஆரோக்கியம் தடைபடும் வியாதி, இறப்புகள் அதிகமாகும்.
கொரோனோ இரண்டாம் அலை மிகுந்த பாதிப்பை நம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நம் தமிழகம் இந்திய அளவில் பாதிப்பில் முதல் ஐந்து இடங்களில் வருகிறது. அந்தளவிற்கு தமிழ்நாடு கொரோனோ இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்ந நிலையில் நம் முன்னோர்கள் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்பது போன்ன வழக்கங்களை கடைபிடித்து பழக்கப்பட்டவர்கள் அப்படி இருக்கும் போது கொரோனோ நோய் தொற்று சுவாச குழாய், நுரையீரல் போன்றவற்றை பாதிப்படைய செய்து இறுதியில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு செயற்கை சுவாசம் பொறுத்தி கொரோனோ பாதித்த மனிதரின் நோய் எதிர்ப்பு சக்திக்கேற்ப பிழைப்பதும் அல்லது சிகிச்சை பலனின்றி இறப்பதும் நடக்கிறது.
அந்த வகையில் கொரோனோ இரண்டாம் அலை பல உயிர்களை பறித்து வரும் நிலையில் தமிழக அரசு தமிழகத்தின் சில இடங்களில் "நீராவி" பிடிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் மருத்துவ முறைப்படி 'நீராவி' பிடிப்பதால் மனிதரின் சுவாச பாதை சீராகி, சளி, சுவாச கோளாறுகள், நுரையீரலுக்கு செல்லும் பாதை போன்றவை சீராகி நலம் பெறுவர் என்பது காலம்தொட்டே தமிழர்களின் மரபு. இதனைத்தான் தமிழக அரசும் ஆங்காங்கே சில இடங்களில் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.