'தி.மு.க-வின் கருத்து வேறு, எங்கள் கருத்து வேறு' - ஏழுவர் விடுதலை குறித்த தமிழக காங்கிரசின் நிலைப்பாடு!

Update: 2021-06-22 08:00 GMT

"திமுகவின் கருத்து வேறு எங்களின் கருத்து வேறு" என ஏழுவர் விடுதலை தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ்.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது, "குற்றவாளிகளை குற்றவாளிகளாக கருத வேண்டும், வேறு சாயம் பூசக்கூடாது, தி.மு.க-வின் கருத்து வேறு எங்களின் கருத்து வேறு" என்றார்.

தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் ஏழுவர் விடுதலை தொடர்பாக விடுதலை செய்யக்கோரி விருப்பம் தெரிவிக்கும் நிலையில், தமிழக காங்கிரஸாரின் இந்த நிலைப்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Similar News