"அடடா! ஆஹா!! ஓஹோ!!!" - தன்னிலை மறந்து ஸ்டாலினை புகழும் கே.எஸ்.அழகிரி !

Update: 2021-10-14 00:00 GMT

"ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்" என தான் காங்கிரஸ் என்பதையும் மறந்து தி.மு.க புகழ்பாடியுள்ளார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடபெற்ற தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தி.மு.க'வை பாராட்ட காரணம் கிடைத்தால் போதுமே என காத்திருந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

தங்கள் கட்சி வளரவே தங்க மோதிரம் தர வேண்டிய நிலையில் உள்ளதை மறத்து கே.எஸ்.அழகிரி தி.மு.க'வை பாராட்டியிருப்பது காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை படம் போட்டு காட்டியுள்ளது.


Source - Asianet NEWS

Similar News