"ஏன் அந்தோணிசாமி கேரக்டர் பேர ஸ்டாலின்'ன்னு வைக்க வேண்டியதானே?" - பொங்கும் காடுவெட்டி குரு மகன் !

Update: 2021-11-23 10:30 GMT

"குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் என்றோ உங்களால் பெயர் வைக்க முடியுமா?" என நடிகர் சூர்யாவுக்கு காடுவெட்டி குரு மகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம், இந்தத் திரைப்படம் ஓ.டி.டி இணையதளத்தில் வெளியாகி பெரும் வெற்றியையும் அதைவிட பெரிய சர்ச்சையையும் சுற்றியது. இப்படத்தில் அந்தோணி சாமி என்கிற காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்துக்கு குரு என பெயர் வைத்தது மிக முக்கிய காரணம், மற்றும் வன்னியர்களின் சின்னமான அக்னி கலசத்தை பின்னால் வரும்படி காட்சியமைத்தது மற்றுமொரு முக்கிய காரணம். இதற்காக பல அறிக்கைகள், போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் இது தொடர்பாக மறைந்த காடுவெட்டி குரு மகன் கனலரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது, "ஜெய் பீம் திரைப்படத்தில் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தை தாக்கும் வகையில் காட்சி அமைப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அக்னி குலசம் வில்லன் வீட்டில் காலண்டமாக வைக்கப்பட்டுள்ளது. இது ஏன் என தட்டி கேட்டால் இவர்கள் கருத்து சுதந்திரம் என்கிறார்கள். கருத்து சுதந்திரம் பேசுகிற ஞானவேலாக இருக்கட்டும், சூர்யாவாக இருக்கட்டும், உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன், உங்களுக்கு தைரியம் இருந்தால் வன்னியர் சங்கம் கலசத்துக்கு மாற்றாக அங்கு உதயசூரியன் கேலண்டரியோ, இரட்டை இலை வரைந்த கேலண்டரியோ வைக்க முடியுமா? அதேபோல் குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் என்றோ, எடப்பாடி பழனிசாமி என்றோ பெயர் வைக்க முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

பல சர்ச்சையை தொடர்ந்து இவரின் கேள்விகளும் பரபரப்பாக உலா வருகின்றன.


Source - Asianet NEWS

Similar News