அயோத்தி, காசி வரிசையில் கிருஷ்ணர் பிறந்த மதுரா'வை ஜொலிக்க வைக்க வேண்டும் - எம்.பி.ஹேமமாலினி

Update: 2021-12-20 12:00 GMT

கிருஷ்ணர் பிறந்த மதுராவிலும் பிரம்மாண்ட கோவிலை பிரதமர் மோடி எழுப்புவார் என எம்.பி.ஹேமமாலினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா தொகுதியின் எம்.பி ஹேமமாலினி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தூருக்கு நேற்று வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "அயோத்தி மற்றும் காசியைத் தொடர்ந்து மதுராவுக்கும் பிரமாண்டமான கோயில் கிடைக்கும்" என தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், "ராம ஜென்ம பூமியான அயோத்தி, பூர்வ புண்ணிய ஸ்தலமான காசி ஆகிய இந்துக்களின் புண்ணிய ஸ்தலங்களை பா.ஜ.க மீட்டு வரலாறு படைத்து வருகிறது. அதுபோல் அன்பிற்கும் பாசத்திற்கும் அடையாளமான கிருஷ்ணர் பிறந்த மதுராவின் எம்.பி.யாக இருப்பதால், அங்கு ஒரு பிரமாண்டமான கோவில் இருக்க வேண்டும் என்று கூறுவேன்" என்றார்.

மேலும் அவர் கிருஷ்ணர் பிறந்த மதுராவை கண்டிப்பாக பிரதமர் மோடி உருவாக்கிய காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தைப் போல அழகுபடுத்த முடியும் என உறுதியாக தெரிவித்தார்.


Source - Maalai malar

Similar News