தி.மு.க'விற்கு தலைவலியாக மாறிப்போன நாம் தமிழர் - பெருமிதத்தில் சீமான் !

Update: 2021-12-25 08:45 GMT

தி.மு.க'விற்கு தலைவலியாக உருவெடுத்து வருகிறது நாம் தமிழர் கட்சி, இதனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெருமையாக கூறியுள்ளார்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலாட்டா செய்வதற்காக வந்த தி.மு.க'வினர் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை காவல் துறையினர் தலையிட்டு சமாதானம் செய்து அங்கிருந்து தி.மு.க'வினரை அப்புறப்படுத்த முயன்றதால் தி.மு.க'வினர் எதிர்த்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் அங்கு கலவரம் ஏற்படுத்த முயன்ற தி.மு.க'வினர் 16 பேரை கைது செய்தனர்.

அங்கு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது, "தி.மு.க'வினர் நாம் தமிழர் கட்சியை எதிர்த்து போராடுவது எங்களுக்கு பெருமைதான். அரசுக்கு எதிராக பேசக்கூடாது என கூறுவது நல்ல ஜனநாயகம் அல்ல" என தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுவதுபோல் தி.மு.க'வினர் சமீப காலமாக நாம் தமிழர் கட்சியினரை சமூக வலைதளத்திலும், களத்திலும் விமர்சித்தும், எதிர்த்தும் வருவது குறிப்பிடதக்கது.


Source - NEWS 7

Similar News