பொதுபாதையில் தடுப்பு சுவர் கட்டி சொந்தம் கொண்டாடும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்!

Update: 2022-01-12 10:31 GMT

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றிய செயலாளராக இருக்கும் சரவணன் என்பவர் தனிநபரின் வீட்டின் பின்புற வழியை அடைக்கின்ற வகையில் பொதுபாதையில் மதில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கணேசன் என்பவர் தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒன்றிய செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தனிநபர் வீடு முன்பாக அராஜகம் செய்து வருகின்றார்.

பொது பாதை என்பது அனைவரும் செல்வதற்காகத்தானே தவிர அதனை யாரும் தனிநபர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருந்தும் அவர் எப்படி பொது பாதையை அடைக்கிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News