'ஆசாமிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' - நாராயணசாமியை அசால்ட்டாக டீல் செய்த ஆளுநர் தமிழிசை

Update: 2022-01-15 12:15 GMT

"நாராயணசாமி போன்ற ஆசாமிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியை அசால்ட்டாக டீல் செய்துள்ளார் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை.


சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் ஆளுநர் தமிழிசை பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பின்னர் நாளை தெலுங்கானா'வில் பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்வதாக தெரிவித்தார்.

அடுத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் அமைத்ததற்கு பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். மேலும், சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்றும் அதைத்தான் நான் எப்போதும் கொண்டாடுவேன் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசி அவர், புதுச்சேரியில் அரசு இணக்கமாக செயல்படுகிறது எனவும் நான் மருத்துவர் என்பதால் கொரோனா பணிகளை கூடுதலாக கவனித்தேன், அதிலும் புதுச்சேரியில் கூடுதல் நேரம் செலவிடுகிறேன் என்றார்.

பின்னர் தொடர்ந்த அவர், நான் கூடுதல் நேரம் புதுச்சேரியில் செலவிடுவதை குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெருமைபடவேண்டுமே தவிர வருத்தப்பட வேண்டியதில்லை என்றார். மேலும் சாமிகளுக்கு பதில் சொல்லலாம் ஆனால் நாராயணசாமி போன்ற ஆசாமிகளுக்கு பதில் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.


Source - Asianet NEWS

Similar News