எங்க பொண்ணுக்கு மதம் மாற நடந்தது போல் கொடுமை யாருக்கும் நடக்ககூடாது - தஞ்சை மாணவியின் சித்தி வேதனை

Update: 2022-01-22 09:45 GMT

தஞ்சையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விகராத்தில் மதம் மாற வற்புறுத்தியதே காரணம் என உயிரிழந்த சிறுமியின் சித்தி பகீரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.



தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12'ம் வகுப்பு படித்து வந்த மாணவியை மதம் மாற சொல்லி துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார் இதனை மரண வாக்குமூலமாக வீடியோவும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மதம் மாறியதாக எந்த விதத்திலும் காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடவில்லை என கூறி பல இடங்களில் பா.ஜ.க சார்பில் போராட்டத் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிறுமியின் சித்தி கூறியதாவது, "மதமாற்றம் செய்யக்கோரி இரண்டு ஆண்டுகளாக லாவண்யாவை வற்புறுத்தி வந்தனர். விடுதி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லியும், பாத்திரம் கழுவ சொல்லியும் தொந்தரவு செய்துள்ளனர். தொடந்து மதம் மாற சொல்லி வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்திருக்கிறாள் மதம் மாற வற்புறுத்திய இரண்டு பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எங்கள் பெண்ணுக்கு நடந்த கொடுமை வேற யாருக்கும் நடக்க கூடாது"என தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சித்தி கூறியுள்ளார்.


Source - Maalai malar

Similar News