பா.ஜ.க தனித்து போட்டி - அண்ணாமலையின் அதிரடி முடிவு

Update: 2022-01-31 11:30 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.


அ.தி.மு.க-பா.ஜ.க இடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் பா.ஜ.க தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை பேச்சுவார்த்தை தொடர்ந்தது அதிலும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை இந்நிலையில் பா.ஜ.க தனித்து போட்டியிடுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


இதனை அடுத்து தமிழகத்தில் தனித்து களம் காண பா.ஜ.க தயாராகிவிட்டது, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை அண்ணாமலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Source - Asianet NEWS

Similar News