"பா.ஜ.க வளருகிறது அதை பார்த்து தி.மு.க பதறுகிறது" - வெளுத்து வாங்கும் கரு.நாகராஜன்

Update: 2022-02-01 12:30 GMT

"பா.ஜ.க வளருகிறது அதைப்பார்த்து தி.மு.க பதறுகிறது" என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.


சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கூறியதாவது, "பா.ஜ.க வளர்கிறது அதை பார்த்து தி.மு.க பதறுகிறது. பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு போராடி அதை மதவெறி பிரச்சாரம், கலவரத்தை தூண்டுதல் என பொய் பேசிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை உயர் நீதிமன்றம் லாவண்யா வழக்கு விசாரணையை சி.பி.ஐ'க்கு மாற்றி உத்தரவிட்டதை பதிலாக சொல்கிறேன்.


மாணவியின் மரண வாக்குமூலத்தில் மதமாற்ற வற்புறுத்தல் காரணம் எதுவும் இல்லை நாங்கள் தீவிர விசாரித்து விட்டோம் எனக் கூறி தற்கொலை வழக்கை மூடி மறைக்கப் பார்த்தது தி.மு.க அரசாங்கம் இப்பொழுது சி.பி.ஐ விசாரணையில் உண்மை வரப்போகிறது.


ஒரு மதத்தை புண்படுத்துவதாக புறக்கணிப்பதும், நாங்கள் எந்த மதத்தையும் புறக்கணிக்கவில்லை எங்கள் கட்சியிலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் உண்மையில் மதவெறிக்கு எடுத்துக்காட்டு தி.மு.க'தான் மக்களிடம் கொண்டு செல்வோம்" என்று கூறினார்.



Similar News