புட்டபர்த்தியை இந்துபுரம் என அறிவிக்க மௌனவிரதம் போராட்டம் துவங்கிய நடிகர் பாலகிருஷ்ணா

Update: 2022-02-06 01:00 GMT

ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி மாவட்டத்தை இந்துபுரம் என்று மாற்ற வேண்டும் என நடிகர் பாலகிருஷ்ணா மௌன விரதம் இருந்து வருகிறார்.




ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் 13 மாவட்டங்களை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார் அப்பொழுது தெலுங்கு வருடப்பிறப்பு அன்று 13 மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து 26 மாவட்டமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது.




இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும் இந்துபுரம் தெலுங்கு தேச எம்.எல்.ஏ'வுமான பாலகிருஷ்ணா புட்டபர்த்தி மாவட்டமாக அறிவித்ததை இந்துபுரம் என பெயர் மாற்ற வேண்டும் என மௌனவிரதம் போராட்டத்தை தொடங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் இந்துபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் பின்னர் அம்பேத்கர் சிலை அருகே மௌனவிரதம் போராட்டத்தை துவங்கினார் இந்துபுரம் மாவட்டம் என அறிவிக்கும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

Similar News