திருப்புதல் தேர்வுகளைக்கூட திறம்பட நடத்திட யோக்கியதையற்ற தி.மு.க. அரசு: எஸ்.ஜி.சூர்யா கடும் தாக்கு!

Update: 2022-02-15 12:54 GMT

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து முன்கூட்டியே வெளியாகி வருகின்ற நிலையில், தற்போது மீண்டும் 12ம் வகுப்பு வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் வினாத்தாள்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Full View

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் இருந்து வினாத்தாள்கள் கசியப்பட்டு இணையத்தில் வெளியாகியது. இது பற்றி பாஜக செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி. சூர்யா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில், சில லட்சம் மாணவர்கள் எழுதும் 10, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளைக்கூட திறம்பட நடத்திட யோக்கியதையற்ற திமுக அரசு, இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதும், நீட் தேர்விலோ அல்லது மற்ற தேசிய அளவு தேர்வுகளிலோ ஒரே ஒரு சிறு குறை கண்டாலும் தையத்தக்கா என்று குதிப்பது ஏனோ? இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News