"ஏன் முடிஞ்சா பா.ஜ.க வேட்பாளரை தூக்கி பாருங்களேன்" - சவால் விடும் சீமான்

Update: 2022-02-17 13:00 GMT

"ஏன் தைரியம் இருந்தா பா.ஜ.க வேட்பாளர்களை தூக்கி பாருங்களேன்" என தி.மு.க'வுக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்து தான் போட்டி இருக்கிறது நாங்கள் தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம் பணம் உள்ளவர்கள் தான் அரசியலில் இறங்க வேண்டுமென்றால் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது பண நாயகநாடு என்று தான் சொல்ல வேண்டும்" என்றார்.


மேலும் பேசிய அவர், "வீடு வீடாகச் சென்று சீமானுக்கு வாக்கு செலுத்த வேண்டாம் அது பா.ஜ.க'வுக்கு சென்று விடும் என சில அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரை செய்கின்றனர், பா.ஜ.க தனித்து நிற்கிறது அப்படி இருக்கும் போது நான் எப்படி பா.ஜ.க'வின் பி டீமாக இருப்பேன்? நாம் தமிழர் கட்சியின் 60'க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை கடத்தி வாபஸ் பெற வைத்துவிட்டனர். தைரியமிருந்தால் பா.ஜ.க வேட்பாளரை கடத்தி காட்டுங்கள்" என சவால் விடுத்துள்ளார்.


Source - Junior Vikatan

Similar News