"பா.ஜ.க தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி" ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமித் மால்வியா

Update: 2022-02-24 13:15 GMT

தமிழகத்தில் தி.மு.க, அதிமுக விற்கு அடுத்தபடியாக பா.ஜ.க'தான் மூன்றாவது பெரிய கட்சியான பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக பா.ஜ.க மாநகராட்சியில் 15 வார்டுகள், நகராட்சியில் 56 வார்டுகள், மற்றும் பேரூராட்சியில் 230 வார்டுகள் என மொத்தம் 301 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் அமித் மல்வியா ராகுல் காந்தியை விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல்காந்தி கூறியிருந்தார், ஆனால் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தி'யின் கருத்துக்களை பொய்யாக்கி இருக்கிறது என நம்புகிறேன். தி.மு.க, அ.தி.மு.க'வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பா.ஜ.க தற்போது மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது, இதுவரை வெற்றி பெறாத பகுதியில் எல்லாம் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது" என பதிவிட்டுள்ளார்.


Source - Junior Vikatan

Similar News