உக்ரைனில் இருந்து சென்னை வந்த மாணவர்களை வரவேற்ற பா.ஜ.க. மகளிர் அணி!

Update: 2022-02-27 11:20 GMT

உக்ரைனில் இருந்து சென்னைக்கு வந்த தமிழக மாணவர்களை பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் பாசத்தோடு, அன்போடு வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட நம்முடைய தமிழ் மாணவர்கள் தமிழ் மண்ணிலே தொட்டபோது தமிழக பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் அவர்களை பாசத்தோடு, அன்போடு வரவேற்றார்கள். அனைத்து மாணவர்களையும் நம்மிடம் சேர்க்கும் வரை நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் ஓய மாட்டார்!

மேலும், முழு செலவையும் மத்திய அரசே ஏற்று நம் மாணவர்களை இங்கே கொண்டு வந்து நம்மோடு இணைத்திருக்கிறார்கள்! மத்திய அரசுக்கு இந்த தருணத்தில் நன்றி கூறுவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News