சென்னை மாமன்றத்தில் ஒலித்த ஜெய்ஹிந்த்!

Update: 2022-03-02 10:24 GMT

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதே போன்று தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக கைப்பற்றியது.

இதனிடையே வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா இன்று மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து மாநகராட்சிகளிலும் கவுன்சிலர்கள் ஆர்வமுடன் பதவியேற்று வருகின்றனர்.

Full View

அதே போன்று சென்னை மாநகராட்சியில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற உமா ஆனந்தன் இன்று மாநகராட்சி மாமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்பதற்கு முன்னர் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News