ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் இந்திய மாணவர்களை மீட்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது தி.மு.க தனது விளம்பரத்தை புகுத்த அவ்வப்போது முயற்சித்து வருகிறது, அதன் சாயமும் இப்போது வெளுத்து வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிமாநிலங்களில் இருந்து வெளியேறும் மாணவர்களும் விட தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார், தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சரவணன் கூறுகையில், "வட இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு மற்றவர்களைவிட முன்னுரிமை அளித்து வருவதாக" கூறினார். ஆனால் தி.மு.க செய்தி தொடர்பாளர் இந்த செயலுக்கு எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்கவில்லை. இதன் மூலமாக உக்ரேனில் இருந்து இந்திய அரசு மீட்கும் மாணவர்களை வைத்து தி.மு.க அரசியல் செய்ய முற்படுகிறது என்பது தெளிவாகிறது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை வெளியேற்றுவதற்காக ஹங்கேரி, ருமேனியா, போலந்து ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பும் தமிழக அரசின் முடிவை தெரிவித்த அவர் உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து இந்தியில் பேசுவதாகவும் கூறினார்.
தி.மு.க'வால் திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்த ஆபத்தான நிரூபிக்கப்படாத கருத்துக்களால் தமிழ்நாட்டை சேர்ந்த சில மாணவர்களும் இது போன்று கூற ஆரம்பித்துள்ளனர். இந்திய அரசாங்கம் வட இந்திய மாணவர்களை மட்டும் முன்னுரிமை அளித்து வருவதாக சில மாணவர்கள் கூறினர், மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக சில இடதுசாரி ஊடகவியலாளர்களும் தற்போது நடைபெற்று வரும் வெளியேற்ற நடவடிக்கை குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு தவறி விட்டதாகவும் தி.மு.க ஆதரவு ஊடகங்கள் மக்களிடையே தவறாக தகவலை பரப்புகின்றனர். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு தலையிட்டு அதன் காரணமாகத்தான் உக்ரைனிலிருந்து மாணவர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வரப்படுகிறார்கள் எனவும் மக்களிடையே செய்தியாக பரப்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் மாணவர்களும் மத்திய அரசால் மீட்க்கப்படுகிறார்கள், ஆனால் அந்த மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சிகள் யாவும் இதுபோல் மத்திய அரசை குறை கூறி அரசியல் செய்யவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துள்ள தி.மு.க மட்டுமே இது மாதிரி மலிவுவிலை அரசியல் செய்வது குறிப்பிடத்தக்கது.