மக்கள் மருந்தகங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Update: 2022-03-07 12:13 GMT

இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்பெறுகின்ற வகையில் பிரதரின் தொலைநோக்கு சிந்தனையின்படி மக்கள் மருந்தகங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதே போன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள், கடையின் உரிமையாளர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: எல்லா மக்களும் பயன்பெற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையின்படி, மக்கள் மருந்தகங்களின் பயனாளிகளுடன் பாரத பிரதமர் மோடி ஜி கலந்துரையாடிய நிகழ்வில் சென்னையில் மாநில தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காணொளி வாயிலாக கலந்து கொண்டேன். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News