ரசிகர்களை ஈர்க்காத சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' - காத்து வாங்கும் திரையரங்குகள்

Update: 2022-03-11 12:15 GMT

நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வன்னியர் சமுதாய இயக்கங்களின் எதிர்ப்பு காரணமாக திரையரங்குகளில் அதிக கூட்டம் மற்றும் வரவேற்பு இல்லாமல் இருக்கிறது.


'ஜெய்பீம்' படத்தில் அக்னி கலசத்தை வைத்து நடிகர் சூர்யா அவமதிக்கும் விதமாக காட்சி அமைப்பை எடுத்ததாக வன்னியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதற்கு சூர்யா தரப்பு மன்னிப்பு கோரவில்லை இதனால் கோபமடைந்த வன்னியர் சங்கங்கள் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.


மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையிடக் கூடாது என பா.ம.க சார்பில் அறிக்கை திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டது.


இந்நிலையில் நேற்று 'எதற்கும் துணிந்தவன்' படம் திரையரங்குகளில் வெளியானது, ஆனால் சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் அதிகமாக கூட்டம் இல்லை, மேலும் ஒருபுறம் பா.ம.க'வின் எதிர்ப்பு இருந்தாலும் மறுபுறம் அந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 'வலிமை' திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் குடும்பம் குடும்பமாக வரும் ரசிகர்கள் 'வலிமை' திரைப்படத்திற்கு சென்றுவிடுவதாகவும் திரையரங்கு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதனால் நடிகர் சூர்யா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.


Similar News