விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பா? - திட்டம் என்ன?

Update: 2022-03-16 06:30 GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யை பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலமாக அரசியலுக்கு வருவதை விரும்புவதாக அவரது சமீபகால நிகழ்வுகள் தெரிவிக்கின்றன, கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அவர் இயக்கத்தை சார்ந்தவர்கள் போட்டியிட்டனர் என்றும் அவரது இயக்கத்தின் தரப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் எதிர்காலத்தில் விஜய்யின் அரசியல் பாதையை தீர்மானிக்க இப்பொழுது முதலே திட்டங்கள் தீட்டி வருவதாகவம் தெரியவந்துள்ளது.


இந்த பரபரப்பான சூழலில் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் அவர்களை விஜய் சந்தித்துள்ளார் என்ற தகவல்கள் வலம் வருகின்றன, பிரசாந்த் கிஷோர் கடந்த தேர்தலில் தி.மு.க'வுடன் வேலை செய்து தி.மு.க'வை வெற்றி பெற வைத்ததும், பா.ஜ.க'வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க பிரசாந்த் கிஷோர் திட்டம் தீட்டுகிறார என்ற தகவல் தீயாக வலம் வருகிறது.



SOURCE - THANTHI TV

Similar News