காவிரியை சுத்தம் செய்து பா.ஜ.க'வின் வெற்றி கொண்டாட்டம் - பரமத்தி வேலூரில் மக்களை ஈர்த்த பா.ஜ.க'வினர்

Update: 2022-03-16 07:15 GMT

பா.ஜ.க'வின் 4 மாநில வெற்றியைக் கொண்டாடும் வகையில் பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றை சுத்தம் செய்து பா.ஜ.க'வினர் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.


நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பரமத்தி வேலூர் பா.ஜ.க கட்சி நிர்வாகிகள் காவிரி ஆற்றங்கரையில் தூய்மைப் பணி செய்து அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.


இதில் பங்கேற்ற பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு, கல்வியாளர் மாவட்ட செயலாளர் கணேஷ், பரமத்தி ஒன்றிய தலைவர் அருண் உள்ளிட்டோர் தனது கட்சியினருடன் காவிரி ஆற்றை சுத்தம் செய்து நல்ல முறையில் பா.ஜ.க வெற்றியை மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாடினர்.


Source - Dinamalar

Similar News