"ஏதாவது செய்யுங்க" - சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்திக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

Update: 2022-03-17 12:00 GMT

காங்கிரஸ் கட்சியின் தோல்வி காரணமாக அதிருப்தி தலைவர்கள் இன்று சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் 5 மாநில கட்சித் தலைவர்கள் ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார், இந்நிலையில் ஜி 23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி உள்ளவர்கள் பங்கேற்றனர்.


நேற்று கூட்டம் முடிவடைந்த நிலையில் இன்று அதற்கு தலைவர்கள் கூட்டாக அறிக்கையை வெளியிட்டனர் அதில், "காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்டங்களில் இருந்தும் அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமை ஒரே தீர்வு, 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி உடன்பாடு கொள்ள வேண்டும் பா.ஜ.க'வை காங்கிரஸ் வீழ்த்துவது அவசியம்" எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க இருப்பது குறித்து தெரிவித்துள்ளனர்.



Source - Maalai malar

Similar News