மண்டல தலைவர்கள் பிரிப்பதில் அமைச்சருக்கும், தி.மு.க.வினருக்கும் மோதல்!

Update: 2022-03-21 11:29 GMT

மதுரையில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் யார் யார் நியமனம் செய்வது பற்றிய நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜனுக்கும் மாவட்ட செயலாளர் பொன்.முத்துராமலிங்கத்திற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அமைச்சர் வெளிநடப்பு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வருகின்ற மார்ச் 30ம் தேதி மண்டலம் மற்றும் குழுத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது திமுகவில் உள்ளவர்களுக்கு பதவி பிரிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இதனால் அமைச்சர்கள் மூர்த்தி, பொன் முத்துராமலிங்கள், தியாகராஜன், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஒன்று ரகசியமாக நடைபெற்றது.

அப்போது அமைச்சர் தியாகராஜனுக்கும், பொன் முத்துராமலிங்கத்திற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். தங்கள் ஆதரவுக்குதான் பதவி வழங்க வேண்டும் என்று இரண்டு தரப்புகளும் முட்டி மோதி வருகிறது.

Source: Dinamalar

Image Courtesy: DT Next

Tags:    

Similar News