ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கும் பிரதமர் மோடி

Update: 2022-03-21 12:15 GMT

பிரதமர் மோடி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், 22 மணிநேரம் உழைப்பதாகவும் மகாராஷ்டிர பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிராவில் நடக்கவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது, நம் பிரதமர் நரேந்திர மோடி தினமும் 2 மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்! நாட்டுக்காக 22 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கிறார். இப்பொழுது 24 மணி நேரம் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக உறங்காமல் இருந்து பயிற்சி எடுத்து வருகிறார்.


ஒவ்வொரு நிமிடமும் பிரதமர் மோடி நாட்டுக்காக உழைக்கிறார், தற்போது பிரதமர் உறக்கத்தை தடுத்தால் அந்த 24 மணி நேரமும் உழைக்க முடியும் என கருதி அதற்கான முயற்சி செய்கிறார் அவர். 'ஒரு நிமிடத்தை கூட வீணாக்க வில்லை பிரதமர் மிகவும் திறமையாக செயல்படுகிறார் நாட்டில் எந்த கட்சியில் எது நடந்தாலும் அதை அறிந்து விடுவார்' என தெரிவித்தார் சந்திரகாந்த் பாட்டில்.

ரஷ்யா உக்ரேன் போரின் நிகழ்வுகளால் உலகின் பல நாடுகளில் விலைவாசி உயர்வு, பொருளாதார இன்னல்கள் போன்ற இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் அது போன்ற சிக்கல்கள் இல்லாமல் பொருளாதாரம் சீராக இருப்பதே இதற்கு உதாரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Source - Junior Vikatan

Similar News