விருதுநகரில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: தி.மு.க.வை சேர்ந்தவர் கைதால் தலித் வார்த்தையை நீக்கிய கனிமொழி!

Update: 2022-03-23 09:02 GMT

விருதுநகர் மாவட்டத்தில் ஆபாச வீடியோவை எடுத்து மிரட்டி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில் திமுக பிரமுகர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 4 சிறுவர்கள் அடங்குவர். விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் 27, இவர் திமுக பிரமுகராக உள்ளார். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது இளம் பெண்ணை ஹரிஹரன் காதலிப்பதாக கூறி அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து தினமும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

அவர் மட்டுமின்றி கூட நண்பர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஹரிகரன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். அதன்படி ஜூனத் அகமது 27, பிரவீன் 21 உள்ளிட்டோர் இளம் பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் தன்னை காப்பாற்றுமாறு பாண்டிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிகரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திமுக எம்.பி., கனிமொழி அவசர அவசரமாக ஒரு ட்விட் செய்திருந்தார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது பாலியல் வன்கொடுமை செய்தவர் திமுக பிரமுகரும் கைது செய்யப்பட்டிருப்பதை உணர்ந்த கனிமொழி அவசர, அவசரமாக ட்வீட்டை டெலிட் செய்து மறுபடியும் ஒரு ட்வீட் செய்திருந்தார். விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைக் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இவரது ட்வீட்டை சமூக வலைதளங்களில் இணையவாசிகள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News