ராகுல்காந்தி பேசும் கருத்து தலித்துகளுக்கு எதிராக உள்ளது: மாயாவதி விமர்சனம்!

Update: 2022-04-10 11:20 GMT

பகுஜன் சமாஜ் கட்சி பற்றி கருத்து கூறும் முன்னம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 100 முறை சிந்தித்து செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் அவர் எங்களுடன் கூட்டணிக்கு முன்வரவில்லை என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், ராகுல்காந்தி கருத்துக்கு மாயாவதி கூறியதாவது: ராகுல் பேச்சுகள் அனைத்தும் தலித்துகளுக்கும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியை மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் பேசுவதை உறுதி செய்கிறது. சொந்த கட்சியை சரியாக நிர்வாகம் செய்ய முடியாத காங்கிரஸ் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுகிறது.

மேலும், பகுஜன் சமாஜ்வாதி பற்றி கருத்து கூறுவதற்கு முன்பே ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் 100 முறை சிந்தித்து செயல்பட வேண்டும். அது மட்டுமின்றி நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக பிரதமர் மோடியை கட்டியணைத்ததை போன்று நாங்கள் செய்ய மாட்டோம். உலகமே வேடிக்கை பார்க்கும் கட்சியாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. இவ்வாறு மாயாவாதி கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News