இந்து மதத்தை ஏற்க விரும்பும் அசாதுதீன் ஓவைசி கட்சியின் முன்னாள் தலைவர் - யோகி ஆதித்தியநாத்திடம் தஞ்சம்
அசாதுதீன் ஓவைசியின் கட்சியை சார்ந்த முன்னாள் தலைவரும், அவரது மனைவியும் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி இந்து மதத்தை ஏற்க விரும்புவதாகவும் அதற்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உதவியை நாடவும் விரும்புகிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு துன்புறுத்தல், வரதட்சணை கொடுமைகள் நடைபெற்ற நிலையில் அது குறித்து முஸ்லீம் சமூக தலைவர்களிடம் உதவி கோரியதில் அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என கூறியுள்ளனர்.
அசாதுதீன் ஓவைசியின் AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) இன் முன்னாள் மாவட்டத் தலைவர் முகமது ருவேத் சபீர் மற்றும் அவரது மனைவி சமினா பர்வீன் ஆகியோர் இந்து மதத்திற்கு மாற விருப்பம் தெரிவித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அணுகி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரியுள்ளனர். . தங்கள் சொந்த இஸ்லாம் சமூகத்தின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக முகமது ருவேத் தம்பதியினர் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக மொரதாபாத் காவல்துறையில் முறையான புகார் ஒன்றையும் தம்பதியினர் அளித்துள்ளனர். அந்த புகாரில், தம்பதியினர் தங்களுக்கு விருப்பமான இந்து மதத்திற்கு மாற இஸ்லாம் சமூகத்தினர் தடையாக இருக்கிறார்கள் எனவும், இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக கூறும் அவர்கள் இந்து மதத்திற்கு மாற செயல்முறையைத் தொடங்குவதற்கு தங்கள் இஸ்லாம் மதத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
ஏப்ரல் 11 ஆம் தேதி ட்விட்டரில் வெளியான வீடியோ ஒன்றில், முன்னாள் AIMIM தலைவரின் மனைவி சமீனா பர்வீன், தனது இஸ்லாமிய சொந்தக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்கு உதவ தனது சமூகத்தைச் சேர்ந்த யாரும் முன்வராததால், தாங்கள் இந்து மதத்திற்கு மாற விரும்புவதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியவர்கள். நீதிக்காக பல செல்வாக்கு மிக்க முஸ்லீம் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் கதவுகளைத் தட்டியதாக அவர் கூறினார், ஆனால் அவர் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டார்கள் எனவும் வேறு வழியின்றி, தன்னிச்சையாக மதமாற்றம் செய்வதற்கான சரியான செயல்பாட்டில் உதவி கேட்க முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை அணுகினார்.