தமிழகத்திற்கு வழங்கும் மின்சாரத்தை மத்திய அரசு குறைக்கவில்லை - தி.மு.க. அரசுக்கு அண்ணாமலை பதிலடி!

Update: 2022-04-23 14:04 GMT

சேலம் மாவட்டத்தில் பாஜக கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியா முழுவதும் அரசியல் ஒரு பக்கமாகவே சென்று கொண்டிருக்கிறது. சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு கிறிஸ்தவர்கள் நிறைந்த மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தற்போது மத்தியில் 8 ஆண்டுகள் ஆகியும் பிரதமர் மோடி மீது மக்களுக்கு சலிப்பு வந்ததில்லை. ஆனால் திமுக ஆட்சி வந்து ஒரு ஆண்டுக்குள் எப்போது முடியும் என மக்கள் நினைக்கின்றனர்.

மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு 7,500 மெகாவாட் மின்சாரம் வழங்கி வருகிறது. தற்போது வெறும் 5 சதவீதம் மட்டுமே மத்திய அரசு குறைத்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு வழங்காததால் மின்தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று முதலமைச்சர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், தமிழகத்தில் செயற்கையான முறையில் மின்தட்டுபாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் பார்க்க திமுக விரும்புகிறது. எப்படி எல்லாம் கொள்ளை அடிக்க முடியுமோ அதனை தற்போது வரையில் திமுக அரசு செய்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twiter

Tags:    

Similar News