அமைச்சர் பொன்முடி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம்! வைரலாகும் காணொளி!

Update: 2022-05-15 10:11 GMT

கோவை : அமைச்சர் பொன்முடி பங்கேற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


"பெரும்பாலான தமிழக செய்தி ஊடகங்கள், ஆளுங்கட்சிக்கு சார்புடன் செயல்பட்டு வருகிறது" என்று பெரும்பாலானோர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல், தமிழகத்திலுள்ள ஊடகங்களும், தமிழக அரசின் செயல்பாடுகளை கொண்டாடுவதும், தவறுகளை சுட்டிக்காட்ட மறுப்பதுமாக இயங்கிவருகிறது.


இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்ற பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பத்திரிக்கை நிருபர்களுக்கு 500 ரூபாய் ரொக்கப் பணம்  லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.


பட்டமளிப்பு விழாவிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகை நிருபர்கள் ஒவ்வொருவருக்கும் பைல்கள் வழங்கப்பட்டுள்ளது. அப்பைல்களுக்குள்ளே ஒரு சிறிய கவரில், 500 ரூபாய் ரொக்கப் பணம் இருந்துள்ளது.


இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Full View


Similar News