கோயிலில் செருப்புடன் சென்ற தி.மு.க.வினர்: அர்ஜூன் சம்பத் கண்டனம்!

Update: 2022-05-18 03:23 GMT

வேலூர் செல்லியம்மன் கோயிலில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் காலில் செருப்புடன் சென்றுள்ளதற்கு இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வேலூர் செல்லியம்மன் கோயிலில் தி.மு.க.வினர் காலில் செருப்புடன் சென்றுள்ளனர். இது கண்டிக்கதக்கது! இதுதான் தி.மு.க. கோயிலில் விழா நடத்தும் லட்சணமா? நாங்கள் இந்துக்களுக்கு எதிரி இல்லை என தண்டோரோ போடாத குறையாக கதறும் அமைச்சர் சேகர்பாபு இதற்கு என்ன சொல்ல போகிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். சமீபகாலமாக தி.மு.க.வினர் செய்யும் அராஜகத்திற்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. 

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News