லோக் சபா தேர்தலுக்கு ஆயுத்தம்: 'பூத்' கமிட்டிகளை பலப்படுத்த பா.ஜ.க. வியூகம்!

Update: 2022-05-25 06:22 GMT

பா.ஜ.க.வின் பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் திட்டத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (மே 25) துவக்கி வைக்கிறார். அதாவது வருகின்ற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.க. முன்னேற்பாடுகளை செய்ய துவங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ.க. பூத் கமிட்டிகளை பலப்படுத்துவதற்கு முடிவு எடுத்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 2,300க்கும் மேற்பட்ட லோக்சபா மற்றும் சட்டசபைத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தம் 7,500 பூத் கமிட்டிகளை பலப்படுத்த பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் திட்டத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை (மே 25) காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார். இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் ஜே.பி.நட்டாவுடன் கலந்துரையாடுவார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்ட பின்னர் பல்வேறு முடிவுகளை பா.ஜ.க. அறிவிக்க உள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News