'கத்தியை விட நம் புத்தி கூர்மை' - வன்னிஅரசுக்கு பாடம் எடுத்த அண்ணாமலை

Update: 2022-05-31 07:31 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னி அரசு ட்விட்டர் பதிவில் அண்ணாமலையை குறிப்பிட்டிருந்தார். அதில், எச்சரிக்கை, பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி, சனாதனத்தை! வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம்தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுப்படுத்தும் சாதிய மனநோயாளி அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இவரது பதிலடி கொடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: அண்ணா வணக்கம்!

கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள்.

உங்களுக்காக ஒரு ஆங்கிலம், தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும்.

வாழ்க வளமுடன் என குறிப்பிட்டுள்ளார்.

Source: Twitter

Image Courtesy: The Hindu

Tags:    

Similar News