அனுமதியின்றி கிறிஸ்தவர்கள் ஜெபக்கூடம் - இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தால் நிறுத்தம்!

Update: 2022-06-07 04:35 GMT

கோவை மாவட்டம், சோலைப்படுகை என்ற பகுதியில் கிறிஸ்தவர்கள் அனுமதியில்லாமல் ஜெபக்கூடம் நடத்தி வந்தனர். இது பற்றி இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரியவந்தது.

இதனையடுத்து ஊர் மக்களுடன், இந்து முன்னணியினர் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டவிரோதமாக நடைபெறும் ஜெபக்கூடத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஜெபக்கூடம் நிறுத்தப்படும் என்று போலீசார் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து இந்துக்கள் அமைதியாகினர். இது குறித்து நல்லூர் வயல் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News