அழகான பெண்களுக்கு அதிக சம்பளம்: தி.மு.க. எம்.எல்.ஏ.வின் ஆணவப் பேச்சு!

Update: 2022-07-03 11:01 GMT

ஆண்களுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும், ஆனால் பெண்கள் அழகாக இருந்தாலே போதும் வேலை மற்றும் அவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கிடைக்கும் என்று வேடசந்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசியிருப்பது மாணவ, மாணவிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கல்லூரி கனவு என்ற உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேடசந்தூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., காந்திராஜன் அனைவரையும் அதிர்ச்சியடையும் படி பேசியுள்ளார்.

இன்றை சூழலில் வெளிநாட்டு நிறுவனங்கள், கல்லூரிகளில் எடுக்கும் மதிப்பெண்களை பார்ப்பதில்லை. மதிப்பெண் முக்கியமாக இருந்தாலும் அவர்கள் மாணவர்களின் ஆங்கிலத் திறனை பார்க்கின்றனர். ஆங்கிலம் இல்லாமல் ஆண்களுக்கு வேலை கிடைக்காது. ஆனால் பெண்களாக இருந்தால் அழகாக இருந்தாலே போதும். அவர்களுக்கு கூடுதல் சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது. இவ்வாறு தி.மு.க. எம்.எல்.ஏ., பேசினார். அவரது பேச்சை கேட்ட மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இது போன்ற பேச்சுக்களை எப்படி ஒரு மக்கள் பிரதிநிதி பேசுகின்றார் என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News