இந்து முறைப்படி பூஜை - ஆத்திரமடைந்து தடை செய்த தி.மு.க எம்.பி.செந்தில்குமார்

Update: 2022-07-16 12:46 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடைபெற்ற விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள் மற்றும் கிறிஸ்தவ பிரமுகர்களை ஏன் பங்கேற்க அழைக்கவில்லை என்று அதிகாரிகளிடம் தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் ஆவேசமடைந்து பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகுட்பட்ட ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி நடைபெற்றது. அப்போது அந்த துறையை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்குவதற்காக பூமி பூஜை செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த விழாவில் பங்கேற்ற தருமபுரி தொகுதி தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் பூமி பூஜை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது அரசு விழாவில் இந்து முறைப்படி பூஜை செய்யக்கூடாது.

Full View

மேலும், கிறிஸ்தவ பாதிரியார் எங்கே? முஸ்லிம் பிரதிநிதி எங்கே என்று கேள்வி எழுப்பினார். இது திராவிட மாடல் என்றும் கூச்சலிட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தி.மு.க.வில் சேர்ந்தவர்களே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். எந்த ஒரு பணி செய்தாலும் இந்து முறைப்படி அரசு அலுவலகங்களில் பூஜை செய்வது வழக்கம். இது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மட்டுமே தனியாக அமைச்சர் உள்ளார். அந்த துறையின் மூலம் வரும் வருமானம் பல அரசு நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. இதற்கிடையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் வருவாய் அரசுக்கு கொடுப்பதில்லை, பூமி பூஜை செய்யக்கூடாது என்று சொல்லும் தி.மு.க. எம்.பி., செந்தில்குமார், முதலமைச்சர் ஸ்டாலினிடம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கிடைக்கின்ற வருவாய் மற்றும் அந்த துறையை நீக்குவதற்கு சொல்வதற்கு தைரியம் இருக்கிறதா என்ற கேள்வியும் வந்தவர்கள் முணுமுணுத்தவாறு இருந்தனர்.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News