அரசியல்வாதிகளின் வார்த்தைகள் தான் அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. அது மக்கள் முன் ஆகட்டும், ஊடக முன்னிலையாகட்டும், அறிக்கையாகட்டும், பொதுக்கூட்டம் ஆகட்டும், ஏன் தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட விளம்பரங்களை வெளியிடும் காலகட்டத்தில் கேமரா முன் நடிக்கும் போது "ரெடி, ஸ்டார்ட், கேமரா,ஆக் ஷன்" என கூறி எழுதியதை படிப்பதாகட்டும். அரசியல்வாதிகளின் வார்த்தைகளே எண்ணங்களாகின்றன.
அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தங்கள் எண்ணங்களை, தரத்தை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றன. ஒரு சிலர் அச்சில் ஏற்ற இயலாத வார்த்தைகளை சர்வ சாதாரணமாகவும், ஒரு சிலர் அதிமேதாவி தனமாகவும் வார்த்தைகளை உதிக்கின்றனர். அச்சில் ஏற்ற இயலாத வார்த்தைகளுக்கு மக்கள் தேர்தலில் பதிலடி தருவர்.
ஆனால் அதிமேதாவித்தனமான வார்த்தைகளுக்கு உடனடியான பதிலடி தரவேண்டியது நம் கடமை அந்ந வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க'வின் தேசிய மகளிரணி தலைவர் திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். அவருன் போட்டியாக சினிமா நடிகர் திரு.கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
இருவரும் களத்தில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி'க்கு பதில் தரும் வகையில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி எங்கள் தலைவரை பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால்தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம்
அவரது சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் மாண்புமிகு. நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதியமைச்சர் மாண்புமிகு. நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார். அடுத்தடுத்து பா.ஜ.க அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு கடைசியாக "வானதி சீனிவாசன் போன்ற துக்கடா" தலைவர்களுடன் வைத்துக்கொள்ளலாம். மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும்" என மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.