அம்பேத்கர் பிறந்தநாளை பத்து நாட்கள் கோலாகல விழாவாக கொண்டாடும் மத்திய அரசு!

Update: 2022-03-30 12:30 GMT

வரும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அரசின் சமூகநலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பா.ஜ.க எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.


டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பா.ஜ.க எம்பிக்கள் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது, பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14ஆம் தேதி வருவதையொட்டி ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தொடங்கி 16ஆம் தேதி வரை சமூக நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமூகநீதி தொடர்பான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்..


மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அப்பொழுது கேட்டுக்கொண்டார். குறிப்பாக பட்டியலின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம்பால் தெரிவித்தார்.


மேலும் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் 'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா' திட்டத்தை மேலும் நீட்டிப்பு செய்வது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Source - Maalai Malar

Similar News