பகவதி அம்மனின் பக்தையாக ஆளுநர் Dr. தமிழிசை அமைச்சருக்கு கோரிக்கை..!

Update: 2021-06-05 06:04 GMT

சில தினங்களுக்கு முன்பு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஆகியுள்ளது . இந்த செய்தி அறிந்த உடன் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி அங்கு சென்று பார்வையிட்டார். அவரை தொடர்ந்து பா.ஜ.க மாநிலத்தலைவரும் தீயினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேரில் சென்று கேட்டறிந்தார்.  


இவ்வாறு இருக்கையில் நேற்று ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தினை ஆய்வு செய்தார். இதனை அறிந்த ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தர்ராஜன், சேகர் பாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோயிலை விரைந்து சீரமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News