வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு.. தமிழகம் முழுவதும் நகராட்சி முன்பு ஆர்பாட்டம் செய்த பா.ம.க.,!

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு.. தமிழகம் முழுவதும் நகராட்சி முன்பு ஆர்பாட்டம் செய்த பா.ம.க.,!

Update: 2021-01-07 14:11 GMT

வன்னியர்களுக்கு 20 சதவீதம் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மிக நீண்டகாலமாக கோரிக்கை வைத்துள்ளார்.  அவரது உத்தரவுக்கு இனங்க கிராம நிர்வாக அலுவலகம், மற்றும் பேரூராட்சி அலுவலகம் முன்பாக பாமகவினர் இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.

அதே போன்று இன்று தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தருமபுரி, ஈரோடு, தேனி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி தங்களது முழக்கங்களை முன்வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே போன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாமகவினர் தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையரிடம் வழங்கினர். 

தேனி மாவட்டத்தில் பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி கலந்து கொண்டு மனு அளித்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்கள்.

இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக பாமகவினர் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News