நடிகை ரோஜா சென்ற விமானத்தில் கோளாறு: அவசரமாக பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கம்!

ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Update: 2021-12-14 11:52 GMT

ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நடிகை ரோஜா இன்று (டிசம்பர்) விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடிரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுப்பிடித்த விமானி சாதுர்யமாக விமானத்தை அவசரமாக பெங்களூருவில் தரையிறக்கி உள்ளார். விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கி அந்த விமானத்தில் பயணிகள் யாரையும் வெளியில் இறக்கி விடாமல் கடந்த 4 மணி நேரமாக காக்க வைக்கப்பட்டுள்ளனர். என்ன காரணம் எனவும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர் என்று நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா கூறியுள்ளார்.

Source, Image Courtesy: AsiaNet


Tags:    

Similar News