அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல் ! சென்னையில் பதற்றம்!

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கின்ற மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-31 06:53 GMT

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கின்ற மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கின்ற மசோதா சட்டப்பேரவையில் இன்று திமுக அரசு தாக்கல் செய்தது. இதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவையிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேறி சாலையில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதனை கேள்விப்பட்ட அதிமுக தொண்டர்கள் ஆங்காங்கே திமுக எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதனால் விழுப்புரத்தில் பதற்றமான சூழல் உண்டாகியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai

https://www.puthiyathalaimurai.com/newsview/114365/admk-members-protest-to-resist-Jayalalithaa-university-link-issue

Tags:    

Similar News