விவசாயப் பேரணியா, காலிஸ்தான் வன்முறை கும்பலா? கொதிக்கும் மக்கள்!
விவசாயப் பேரணியா, காலிஸ்தான் வன்முறை கும்பலா? கொதிக்கும் மக்கள்!
பல்லாண்டுகளாக பலரும் எதிர்பார்த்த, அனைத்துக் கட்சிகளும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த, பல நிபுணர்களும், விவசாய சங்கங்களும் ஆதரவளித்த வேளாண் சட்டங்கள் சமீபத்தில் மத்திய பா.ஜ.க அரசாங்கத்தால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் தற்பொழுது ஏற்கனவே இருக்கும் முறை மூலம் அதிக லாபம் சம்பாதிக்கும் இடைத்தரகர்களும், மற்ற மாநிலங்களை விட குறைந்த பட்ச ஆதார விலையில் பங்கை அதிகமாக அனுபவிக்கும் பஞ்சாப் மாநில விவசாயிகளும், இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதரவு பெறும் இப்போராட்டம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் ஊடுருவப்பட்டது
60 நாட்களுக்கும் மேல், 11 கட்டங்களுக்கும் மேலாக மத்திய அரசாங்கம் இவர்களுடன் எல்லாவிதத்திலும் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஒன்றரை வருடங்கள் விவசாய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது நிறுத்தி வைக்கப்படும் என்றும் எந்தெந்த ஷரத்துகள் பிரச்சனைக்கு உரியது என்பதை பேசி சரிசெய்யலாம் என்று வாக்குறுதி அளித்த போதும், உச்ச நீதிமன்றம் 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து சட்டத்தின் நிறைகுறைகள் விவாதிக்கப்படும் என்று கேட்டுக் கொண்ட பிறகும், எந்தவித பேச்சு வார்த்தைக்கும் உடன்படாமல் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் போராடி வருகிறார்கள்.
சட்டமியற்றுவதும், அதை செயல்படுத்துவதும் மக்கள் தேர்ந்தெடுத்த பாராளுமன்றத்தின் உரிமை என்றும், சில நூறுபேர் வீதிகளில் இறங்கி தங்கள் சுயலாபத்திற்காக போராடினால் சட்டத்தை திரும்ப பெற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று சமூக ஊடகங்களில் மக்கள் கடந்த பல நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அரசாங்கம் மிகுந்த பொறுமையுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்தது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று தாங்களும் டெல்லியில் ஒரு பேரணி நடத்துவோம் என்று அவர்கள் கோரிக்கையை முன்வைத்த தொடங்கினர்.