அய்யோ நான் அப்படி சொல்லவே இல்லீங்க! இரண்டே நாளில் அந்தர் பல்டி அடித்த ஜகத்ரட்சகன்!

அய்யோ நான் அப்படி சொல்லவே இல்லீங்க! இரண்டே நாளில் அந்தர் பல்டி அடித்த ஜகத்ரட்சகன்!

Update: 2021-01-21 09:31 GMT

"புதுச்சேரியில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என தி.மு.க ஜகத்ரட்சகன் அப்படியே அந்தர் பல்டி அடித்துள்ளார்.

புதுச்சேரி மாநில தி.மு.க நிர்வாகிகள் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில தி.மு.க தேர்தல் பொறுப்பாளரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். 

அதற்கு முன் ஜகத்ரட்சகன் "23 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க தலைமையில் ஆட்சி அமைத்து கறுப்பு, சிவப்புக் கொடி பறந்த மண் புதுச்சேரி. இந்த மண்ணில் மீண்டும் தி.மு.க தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ள அனைவரின் உணர்வுகளையும் ஸ்டாலினிடம் சொல்ல இருக்கிறேன், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுத் தந்தால்தான் நான் இங்கே வருவேன். இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன்" வீராவேசமாக பேசியிருந்தார்.

ஆனால் இந்த கூட்டத்தில், "புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என புதுச்சேரியில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று, தி.மு.க தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தான் அர்த்தம். யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்" என தான் பேசியதை இரண்டு நாட்களில் அப்படியே மாற்றி அந்தர் பல்டி அடித்து பேசினார்.

தி.மு.கவிற்கு மாற்றி பேசும் வழக்கம் புதிது இல்லை என்றாலும் இப்படி இரண்டு நாட்களில் மாற்றி பேசுவது அதிரடியான ஒன்று என உடன்பிறப்புகளே கருத்து தெரிவிக்கும் அளவில் இருந்தது ஜகத்ரட்சகன் பேச்சு.

Similar News