'அண்ணாமலை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' - மிரட்டும் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

'அண்ணாமலை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிரட்டும் தோணியில் பேசியுள்ளார்.

Update: 2022-05-15 12:15 GMT

'அண்ணாமலை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிரட்டும் தோணியில் பேசியுள்ளார்.

சமீப கால தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, பா.ஜ.க என்ற இருமுனைப் போட்டி நிலவி வருகிறது, இந்த நிலையில் ஆளும் தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க குறிப்பாக அண்ணாமலையின் நடவடிக்கைகள் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 'அண்ணாமலை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க தேனி வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. போடிநாயக்கனூர் திருவள்ளூர் சிலை அருகில் மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 'திருவாரூர் தெற்கு வீதிக்கு கலைஞர் பெயர் வைப்பதற்கு அனுமதிக்க அண்ணாமலை யார்?' என கேள்வி எழுப்பினார்.

திருவாரூரில் உள்ள தெருவுக்கு அல்ல, திருவாரூருக்கே அந்த கலைஞர் பெயர் வைக்கலாம். அண்ணாமலை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், தமிழகத்தில் அண்ணாமலை, முருகன், அல்ல அந்த மோடியே வந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என பேசினார்.

தமிழகத்தில் தி.மு.க'வின் அரசியலை அவ்வப்போது முறியடித்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அண்ணாமலை ஜாக்கிரதையாக உள்ள வேண்டும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - News 18 Tamil Nadu

Similar News